இஸ்ரேலின் சீசரியா நகரில் அமைந்துள்ள அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லெபனான் எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் 3 ட்ரோன்கள் நுழைந்ததாகவும், அதில் 2 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தின்போது பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது மனைவியும் வீட்டில் இல்லாததால், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.