டெல்லி CRPF பள்ளி அருகே மர்ம பொருள் வெடித்ததால் அங்கு சிறிது நேரம் புகைமூட்டம் நிலவியது.
பிரசாந்த் விஹார் பகுதியில் CRPF பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், பள்ளி சுவரின் மிக அருகில் மர்ம பொருள் வெடித்துள்ளது. காலை 8 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், வெடித்த பின் அப்பகுதி முழுவதும் வெண்ணிற புகை சூழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், வெடித்த மர்ம பொருள் என்ன என்பது குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.