தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அதன்படி, காலை 6 முதல் 7 மணி, இரவு 7 முதல் 8 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்குமாறும், குறைந்த ஒலியுடன் கூடிய பட்டாசுகள், காற்றை மாசுபடுத்தாத பசுமை பட்டாசுகள் ஆகியவற்றை மட்டுமே வெடிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டுமெனவும், அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. .