நிலவில் ஆதிக்கம் : நிரந்தர விண்வெளி நிலையம் அமைக்க சீனா ஆர்வம் - சிறப்பு கட்டுரை!
Oct 26, 2025, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவில் ஆதிக்கம் : நிரந்தர விண்வெளி நிலையம் அமைக்க சீனா ஆர்வம் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 20, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2050ம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா, அடுத்த ஆண்டிலிருந்து செயற்படுத்த இருக்கும் விரிவான மேம்பாட்டுத் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1969ம் ஆண்டு தொடங்கி 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் 10 அமெரிக்கர்கள் சந்திரனில் தரையிறங்கியுள்ளனர். அதன்பிறகு, மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

அரை நூற்றாண்டுக்கும் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை, அமெரிக்கா மட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் நிலவு பயணத் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியிருக்கின்றன.

2035-ஆம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்கவும், 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று செயல்பட்டு வருகிறது.

சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை, நீண்டகால விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திர விண்வெளி நிலையத்தை உருவாக்கவும் மற்றும் கிரகங்களில் மனிதன் வாழக் கூடிய சாத்தியக்கூறுகளை ஆராயவும் தனது லட்சியத் திட்டங்களாக சீனா அறிவித்துள்ளது.

அதன்படி, சீனாவின் சந்திர விண்வெளி நிலையம், 2028 மற்றும் 2035 ஆண்டுக்குள் பகுதி பகுதியாக கட்டி முடிக்கப்படும் என்று தெரிய வருகிறது. 2035 ஆம் ஆண்டுக்குள், முதல் கட்டமாக அடிப்படை ஆராய்ச்சி வசதி நிறுவப்படும் என்றும்,இரண்டாம் கட்டம், 2045 இல் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

நிலவில் விண்வெளி நிலையம், எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கு ஒரு தளமாக செயல்படும் என்றும், சந்திரன் மட்டுமின்றி, சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களையும் ஆராய பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திர விண்வெளி நிலையம், எதிர்காலத்தில் இன்னும் மேம்பட்ட விண்வெளி முயற்சிகளுக்கான தயாரிப்புகளும், சோதனைகளும் நடத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், சீனாவின் இந்த திட்டம் பிரபஞ்சம் மற்றும் சூரிய குடும்பத்தின் தோற்றத்தைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிய வருகிறது.

2050ம் ஆண்டுக்குள் விண்வெளி அறிவியலில், முதன்மை நாடாக திகழும் நோக்கத்தில் சீனா இந்த திட்டத்தில் இறங்கியுள்ளது.

உலகத்தில், நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக மட்டும் அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகவே.

தற்போது, நிலவில் மனிதர்கள் தங்குவதற்கான முயற்சியாகவே, சீனாவின் நிலா பயணத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும் சீனா உருவாக்கி வருகின்றது.

21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் கோலோச்சக் கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று அந்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: chinaspace stationApollo missions.etailed development planunar missions.
ShareTweetSendShare
Previous Post

வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் சிறுமி உயிரிழப்பு – சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்!

Next Post

கரூர் அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies