நிலவில் ஆதிக்கம் : நிரந்தர விண்வெளி நிலையம் அமைக்க சீனா ஆர்வம் - சிறப்பு கட்டுரை!
Apr 30, 2026, 05:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவில் ஆதிக்கம் : நிரந்தர விண்வெளி நிலையம் அமைக்க சீனா ஆர்வம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2050ம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா, அடுத்த ஆண்டிலிருந்து செயற்படுத்த இருக்கும் விரிவான மேம்பாட்டுத் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1969ம் ஆண்டு தொடங்கி 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் 10 அமெரிக்கர்கள் சந்திரனில் தரையிறங்கியுள்ளனர். அதன்பிறகு, மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.

அரை நூற்றாண்டுக்கும் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை, அமெரிக்கா மட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் நிலவு பயணத் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியிருக்கின்றன.

2035-ஆம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்கவும், 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று செயல்பட்டு வருகிறது.

சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை, நீண்டகால விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திர விண்வெளி நிலையத்தை உருவாக்கவும் மற்றும் கிரகங்களில் மனிதன் வாழக் கூடிய சாத்தியக்கூறுகளை ஆராயவும் தனது லட்சியத் திட்டங்களாக சீனா அறிவித்துள்ளது.

அதன்படி, சீனாவின் சந்திர விண்வெளி நிலையம், 2028 மற்றும் 2035 ஆண்டுக்குள் பகுதி பகுதியாக கட்டி முடிக்கப்படும் என்று தெரிய வருகிறது. 2035 ஆம் ஆண்டுக்குள், முதல் கட்டமாக அடிப்படை ஆராய்ச்சி வசதி நிறுவப்படும் என்றும்,இரண்டாம் கட்டம், 2045 இல் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

நிலவில் விண்வெளி நிலையம், எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கு ஒரு தளமாக செயல்படும் என்றும், சந்திரன் மட்டுமின்றி, சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களையும் ஆராய பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திர விண்வெளி நிலையம், எதிர்காலத்தில் இன்னும் மேம்பட்ட விண்வெளி முயற்சிகளுக்கான தயாரிப்புகளும், சோதனைகளும் நடத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், சீனாவின் இந்த திட்டம் பிரபஞ்சம் மற்றும் சூரிய குடும்பத்தின் தோற்றத்தைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிய வருகிறது.

2050ம் ஆண்டுக்குள் விண்வெளி அறிவியலில், முதன்மை நாடாக திகழும் நோக்கத்தில் சீனா இந்த திட்டத்தில் இறங்கியுள்ளது.

உலகத்தில், நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக மட்டும் அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகவே.

தற்போது, நிலவில் மனிதர்கள் தங்குவதற்கான முயற்சியாகவே, சீனாவின் நிலா பயணத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும் சீனா உருவாக்கி வருகின்றது.

21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் கோலோச்சக் கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று அந்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: chinaspace stationApollo missions.etailed development planunar missions.
ShareTweetSendShare
Previous Post

வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் சிறுமி உயிரிழப்பு – சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்!

Next Post

கரூர் அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies