சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஏரியில் குளிக்க சென்ற 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். கூலித்தொழிலாளியான இவரது மகள் ரேவதி, மகன் சிவஸ்ரீ மற்றும் அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகள் திவ்யதர்ஷினி ஆகிய 3 பேரும், அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர்.
நீச்சல் தெரியாத சிவஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றபோது, எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கினர்.
அவரை காப்பற்ற முயன்ற ரேவதியும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.