ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்து தமிழ் குழந்தைகள் நிகழ்வின் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் 5 முதல் 15 வயது வரையிலான 12 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் என மொத்தம் 22 குழந்தைகள் பங்கேற்றனர்.
திருக்குறள் ஒப்புவித்தல், திருவிளக்கு ஏற்றல், ஔவையார், வள்ளலார் கதைகள்,
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் கதைகள், தேவாரம், திருவாசகத்தில் இருந்து பாடல் கற்றல், பஜனை பாடல்கள் , வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சி முழுவதும் குழந்தைகள் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றனர். தொகுப்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதிலளித்தனர்.
இதுதொடர்பாக விழா குழுவினர் தெரிவித்துள்ளதாவது : பல பெற்றோர்கள் எதிர்கால அமர்வுகளுக்கு தன்னார்வத் தொண்டு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் எங்களுடன் இணைந்திருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்.
நடப்பு ஆண்டு குழந்தைகளை பேனா மற்றும் பேப்பரை கொண்டு வரச் சொன்னோம், அது அற்புதமாக வேலை செய்தது. அமர்வுகளின் போது குழந்தைகள் கவனம் செலுத்தி குறிப்புகளை எடுத்துக் கொண்டனர். இந்த முயற்சியை முன்னெடுத்து, நிகழ்வை சாத்தியமாக்கிய ஆனந்த் ஜிக்கு நன்றி என தெரிவித்துள்ளர்.