ஹைதராபாத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், 42 பெண்கள் உள்ளிட்ட 140 பேரை கைது செய்தனர்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பல்வேறு கேளிக்கை விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு “போஸ்” என்ற கேளிக்கை விடுதி செயல்பட்டு வரும் நிலையில், பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தவறான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார், 42 பெண்கள் உள்ளிட்ட 140 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார், 30 பேர மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.