தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் மணலூர் கிராமத்தில் உள்ள திருமேனி அழகர் ஐய்திருமேனி அழகர் அய்யனார்யனார் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த 17-ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. மேள தாளம் முழங்க நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கோயில் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.