போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்துக்கு இந்தியா சார்பில் முதற்கட்டமாக 30 டன் நிவாரண பொருட்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்தாண்டு அக்., 7ல் தாக்குதல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேல் சேர்ந்த சிலரை பணயகைதிகளாக பிடித்து சென்றனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா சார்பில் 30 டன் மருந்துகளும், உணவுப் பொருட்களும் முதற்கட்டமாக அனுப்பிவைக்கப்பட்டன.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி உள்ளது. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள், பல்பொருட்கள், பொது மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.