சென்னை பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் வலிப்பு நோயால் தண்டவாளத்தில் விழுந்தவரை சக பயணிகள் பத்திரமாக மீட்டனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரயில் ஏற வந்த பயணி ஒருவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தார்.
சக பயணிகள் அவரை பத்திரமாக மீட்டு காப்பாற்றினர். பின்னர் அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.