ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி கரையோரங்களில் பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 32 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் 12-வது நாளாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.