செனகலில் பரவலாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் தெற்கில் அமைந்துள்ள நாடு செனகல். இங்கு கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.
இதனால் சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.