ஈரோடு அருகே நூல் சைசிங் மில்லில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரும்பு பீம்களை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
வீரப்பன் சத்திரம் அருகே உள்ள பதினாறு ரோடு பகுதியில் தனியார் நூல் சைசிங் மில் இயங்கி வருகிறது. சைசிங் மில்லுக்கு தேவையான இரும்பு பீம்களை மில் உரிமையாளர் எடுத்து வைத்துவிட்டு, இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர், காலையில் வந்து பார்த்த போது 75- ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரும்பு பீம்கள் மாயமானது தெரிய வந்தது. புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீசார், நந்தேஸ்வரன் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.