தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பணிகள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிற்றருவி மற்றும் புலியருவியில் சுற்றுலா பயணிகள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.