திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் உள்ள புஷ்ப குஜாம்பாள் சமேத சங்கீஸ்வரர் கோயிலில், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கிராம மக்கள் முன்னிலையில் புஷ்பகுஜாம்பாள் சமேத சங்கீஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்த தொல்லியல் துறை அதிகாரிகள் கோயிலின் பழங்கால கல்வெட்டுகள் ஒதுக்குப்புறமான முட்புதரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது கிருஷ்ண தேவராயரின் ராஜ முத்திரையுடன் கூடிய 3 செப்பு ஏடுகளை கண்டுபிடித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், கிருஷ்ண தேவராயார் நான்கு அந்தணர்களுக்கு தானமாக வழங்கிய வாசனம்பட்டு கிராமம் குறித்த வரலாற்று விவரங்களையும் ஆய்வு செய்தனர்.