பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் என பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் பொறுப்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை பொன் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில துணை தலைவர்கள் கரு. நாகராஜன், வி. பி துரைசாமி , நாராயணன் திருப்பதி மற்றும் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, ஒவ்வொரு பாஜக உறுப்பினர்களும் 50 புதிய நபர்களை பாஜகவில் சேர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் 66 மாவட்டங்களுக்கு பாஜக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.