தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மழை குறைந்து நீர்வரத்து சீரானதால் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.