நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து மக்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
காவலர் வீரவணக்க தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தீவிரவாதிகளிடம் இருந்து பொதுமக்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.