தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலை ஒழுங்குபடுத்தவும், வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொழில்துறையில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 9 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
அதில், தொழிலக ஆல்கஹால் பயன்பாடு தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கே உரிமை உள்ளது என உத்தரவிடப்பட்டது.
மேலும், தொழிலக ஆல்கஹால் மீது வரி விதிக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.