எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். 2 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி 16 மீனவர்களைக் கைது செய்தனர்.
மீனவர்களின் 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 16 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.