அன்பு, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தும் உலகத்திற்கு தேவைப்படுவதாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில், பிரம்மா குமாரிகள் அமைப்பின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை,
இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக உலகளாவிய கலாசாரம், அன்பு, அமைதி, நல்லிணக்கம் என்ற தலைப்பில் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அந்த நிகழ்ச்சியின் லட்சனையும் வெளியிடப்பட்டது. இதில் இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்டார். அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மனிதநேயம் இருந்தாலே போதும் ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்தும் ஒரு மனிதனுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
சினிமாவில் அதிகமாக வன்முறையை காட்டுவதால் வெளியே அதிகமாக தெரிவதாகவும், சமூகப் பொறுப்போடு வன்முறைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைத்து காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.