தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 279 கனஅடியாக உள்ள நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் மஞ்சளார் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வராக நதி மற்றும் மஞ்சளார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கடக்கவோ வேண்டாமென பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.