சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஆய்வகத்தில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
திருவொற்றியூர் கிராமத் தெருவில் “விக்டரி” என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் 3-வது தளத்தில் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் 3-ம் தளத்தில் இருந்த மாணவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் அம்பூலன்ஸ் மூலம் திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.