அமெரிக்காவில் வாழ்ந்த மிகவும் வயதான நபரும், உலகின் மூன்றாவது வயதான நபருமான எலிசபெத் பிரான்சிஸ் தனது 115 வயதில் உயிரிழந்தார்.
1909-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி லூசியானாவில் எலிசபெத் பிரான்சிஸ் பிறந்தார். முதலாம் உலகப் போரிலிருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கும் வரை அனைத்தையும் அவர் நன்கு அறிந்திருந்தார்.
ஹூஸ்டனில் ஒரு காபி கடையை நடத்தி வந்தார். இவர் வாகனம் ஓட்டுவதை விட நடைபயிற்சி செய்வதை விரும்பினார். இதுவரை அவர் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியை கண்டுள்ளார். இந்நிலையில் தனது 115 வயதில் அவர் மரணம் அடைந்தார்.