தனது திருமணத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா வராதது குறித்து பிரேம்ஜி பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், திருமணம் கோயிலில் நடந்ததால், ரசிகர்கள் அதிகம் கூடுவர் என்பதால், அவரால் வரமுடியவில்லை என தெரிவித்தார். ஆனால், திருமணம் முடிந்ததும் இரண்டு பேரையும் அழைத்து மனதார இளையராஜா வாழ்த்தியதாகவும், வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பரிசு ஒன்றையும் கொடுத்ததாகவும் பிரேம்ஜி கூறினார்.