அமெரிக்க அதிபர் தேர்தல் : பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன ? - சிறப்பு கட்டுரை!
Oct 6, 2025, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் : பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன ? – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இருவரில் யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்பற்றப்படும் நடைமுறைகளை சற்று விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும் என்றாலும் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் தேதியும், அதிபர் பதவியேற்கும் தேதியும் அரசியலைமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, அமெரிக்காவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவும், அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்கும் நிகழ்வும் நடைபெறும்.

தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகள் தேசிய அளவில் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். மாறாக மக்கள் அளிக்கும் வாக்கு மாநில அளவில் மட்டுமே கணக்கிடப்படும்.

மக்கள் வாக்கு அடிப்படையில், எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் தான் அமெரிக்க அதிபரை தேர்வு செய்வார்கள்  அமெரிக்காவின் மக்கள் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் எலக்டோரல் காலேஜ் உறுப்பினர் வாக்குகள் உள்ளன.

அதன்படி நாடாளுமன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை எலக்டோரல் காலேஜும் கொண்டிருக்கும்  மக்கள் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகள் இருக்கும் நிலையில் மொத்தமுள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

மைனே மற்றும் நெப்ராஸ்கா மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் மக்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அந்த மாநிலத்தில் உள்ள எலக்டோரல் காலேஜின் அனைத்து வாக்குகளையும் எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய விதியும் உள்ளது.

அதனால் தான் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகளவு பெற்றிருந்தாலும் எலக்டோரல் காலேஜ் வாக்குகுளை குறைவாக பெற்றதால் டிரம்பிடம் தோல்வியை தழுவினார். எனவே மாநில அளவில் அதிக வாக்குகளைப் பெற்றாலும் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்குத் ஆதரவாக இருந்தாலும் டெக்ஸாஸ், புளோரிடா, ஜார்ஜியா, அரிஜோனா, விஸ்கான்சிங் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள எலக்டோரல் காலேஜ் வாக்குகளே அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றன.

ஒருவேளை எலக்டோரல் காலேஜ் வாக்குகளை இரண்டு வேட்பாளர்களுக்கும் சமமாக பெறும் பட்சத்தில் மேலவை உறுப்பினர்களான செனட் உறுப்பினர்களும் வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுப்பர்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags: US presidential electionDemocratic PartyFormer President TrumpVice President Kamala HarrisRepublican Party
ShareTweetSendShare
Previous Post

வேலூர் அருகே பேருந்து வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மாணவர்கள்!

Next Post

சூளகிரி அருகே விவசாய தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு!

Related News

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

தமிழ் ஜனம் டிவியை தடை செய்ய திமுக அரசுக்கு எந்த அருகதையும் இல்லை : கே.பி.ராமலிங்கம்

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

சரணாலயம் அமைக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத்

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies