அமெரிக்க அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?
Jul 8, 2025, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்க அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

Web Desk by Web Desk
Nov 5, 2024, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இருவரில் யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்பற்றப்படும் நடைமுறைகளை சற்று விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும் என்றாலும் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் தேதியும், அதிபர் பதவியேற்கும் தேதியும் அரசியலைமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்காவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவும், அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்கும் நிகழ்வும் நடைபெறும்.

தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகள் தேசிய அளவில் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். மாறாக மக்கள் அளிக்கும் வாக்கு மாநில அளவில் மட்டுமே கணக்கிடப்படும்.

மக்கள் வாக்கு அடிப்படையில், எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் தான் அமெரிக்க அதிபரை தேர்வு செய்வார்கள் அமெரிக்காவின் மக்கள் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் எலக்டோரல் காலேஜ் உறுப்பினர் வாக்குகள் உள்ளன.

அதன்படி நாடாளுமன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை எலக்டோரல் காலேஜும் கொண்டிருக்கும் மக்கள் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகள் இருக்கும் நிலையில் மொத்தமுள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

மைனே மற்றும் நெப்ராஸ்கா மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் மக்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அந்த மாநிலத்தில் உள்ள எலக்டோரல் காலேஜின் அனைத்து வாக்குகளையும் எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய விதியும் உள்ளது.

அதனால் தான் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகளவு பெற்றிருந்தாலும் எலக்டோரல் காலேஜ் வாக்குகுளை குறைவாக பெற்றதால் டிரம்பிடம் தோல்வியை தழுவினார்.

எனவே மாநில அளவில் அதிக வாக்குகளைப் பெற்றாலும் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்குத் ஆதரவாக இருந்தாலும் டெக்ஸாஸ், புளோரிடா, ஜார்ஜியா, அரிஜோனா, விஸ்கான்சிங் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள எலக்டோரல் காலேஜ் வாக்குகளே அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றன.

ஒருவேளை எலக்டோரல் காலேஜ் வாக்குகளை இரண்டு வேட்பாளர்களுக்கும் சமமாக பெறும் பட்சத்தில் மேலவை உறுப்பினர்களான செனட் உறுப்பினர்களும் வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுப்பர்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: donald trump kamala harris debateHow is the President of the United States chosen?America electionDonald Trump
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேச மதரஸா சட்டம் செல்லுபடியாகும்!

Next Post

டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!

Related News

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தமான ஒன்று – டிரம்ப்

2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies