மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் : வீடுகள் கட்டி கொடுத்த தென் தமிழ்நாடு சேவா பாரதி - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் : வீடுகள் கட்டி கொடுத்த தென் தமிழ்நாடு சேவா பாரதி – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 6, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு சார்பில் இலவசமாக வீடு கட்டி தரப்பட்டது. இது குறித்து சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்…

கடந்தாண்டு இறுதியில் தென்மாட்டங்களில் பெய்த கனமழையின் கோர காட்சிகள் இவை. வரலாறு காணாத இந்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் முற்றிலும் உருக்குலைந்தன.

அப்போது, தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பினர் 500க்கும் மேற்பட்டோர் இரவு பகல் பாராமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நின்றனர். பல்வேறு பகுதியில் அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மீட்புபணியின்போது, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் உடைமைகளை இழந்த பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் தேவை என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பினர், கனமழையால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிதாக வீடு கட்டி தர முன்வந்தனர்.

அதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.

மாசானமுத்து ஐபிஎஸ் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில், ZOHO நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, RSS சேவா துறையின் தேசிய இணை செயலாளர் A.செந்தில்குமார், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செயல் இயக்குநர் சீனிவாசன் மற்றும் பத்மகுமார், ஹரி கிருஷ்ணகுமார், வன்னிய ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பயனாளிகள் ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்து புதிதாக கட்டப்பட்ட வீட்டின் சாவியும், பாரதமாதா மற்றும் திருச்செந்தூர் முருகனின் புகைப்படங்களும் வழங்கப்பட்டன. மேலும் அவர்கள் அனைவரும் சால்வை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ZOHO நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, காலநிலை மாற்றத்தால்தான் வரலாறு காணாத மழை பெய்ததாக கூறினார். மேலும், பொருளாதார வளர்ச்சியை போலவே சுற்றுசூல் பாதுகாப்பும் மிகவும் இன்றியமையாதது எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டியளித்த பயனாளர்கள், தங்களுக்கு வீடு வழங்கிய தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்புக்கு நன்றி தெரிவித்தனர். மழைவெள்ள பாதிப்பின்போது தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பினர் துணை நின்றதையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்க தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த அமைப்பினர் மக்கள் சேவை தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் அருகே தங்கம் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த கொள்ளையர்கள் !

Next Post

மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies