பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் : மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி? சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 11:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் : மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி? சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எளிமையான முறையில் கல்விக்கடன் வழங்கும் பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் குறித்தும், அதன் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

தரமான உயர்கல்வியைப் பெறுவதில் மாணவ, மாணவியர்களுக்கு பணப்பிரச்னை ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம்.

இத்திட்டத்தின் கீழ் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் எந்தவொரு மாணவரும், பிணையோ, உத்தரவாத கையொப்பமோ இல்லாமல் கல்விக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

என்.ஐ.ஆர்.எஃப் சமீபத்திய தரவரிசையின்படி முதல் நூறு இடங்களில் உள்ள அரசு – தனியார் உயர்கல்வி நிலையங்களிலும், 101 முதல் 200 இடங்களில் உள்ள மத்திய, மாநில அரசால் நிர்வகிக்கப்படும் தலைசிறந்த 860 உயர்கல்வி நிறுவனங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் பெறப்படும் கல்விக்கடனில் முழு கல்விக் கட்டணம் மற்றும் படிப்பு சார்ந்த இதர செலவுகளும் அடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் மற்றொரு முக்கிய முயற்சியான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்காக அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7.5 லட்ச ரூபாய் வரையிலான கடனுக்கு 75 சதவிகிதம் உத்தரவாதத்தை மத்திய அரசே அளிப்பதோடு,  8 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான கல்விக்கடனுக்கு 3 சதவிகித வட்டி மானியமும் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணையதளத்தில் கல்விக்கடன், வட்டி மானியம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags: Prime Minister's Vidyalakshmi Schemeeducation loans to studentshigher education loan
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16,000 பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி – தேவஸ்தானம் ஏற்பாடு!

Next Post

பாகிஸ்தான் செயல்திட்டத்தை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies