சபரிமலையில் ஒரே நேரத்தில் 16,000 பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி - தேவஸ்தானம் ஏற்பாடு!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16,000 பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி – தேவஸ்தானம் ஏற்பாடு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சபரிமலையில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சபரிமலையில் மண்டல கால பூஜை வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கல்லில் 5 ஆயிரம் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் 5 தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிலக்கல் மகாதேவர் கோயில் வரிசை வளாகத்தில் 1000 பக்தர்கள் ஓய்வு எடுக்கலாம். நிலக்கல் பஸ் நிலையம் அருகே 3 ஆயிரம் பேர் ஓய்வெடுக்கும் வகையில் ஜெர்மன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

பம்பையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 வரிசை வளாகங்களில் 4 ஆயிரம் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதி உள்ளது. பம்பையில் மேலும் 3 ஆயிரம் பேர் ஓய்வெடுக்கும் வகையில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குழாய் மூலம் வெந்நீர் வழங்கப்படும். மேலும் பக்தர்களுக்கு பிஸ்கெட்டுகள், சுக்கு வெந்நீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பம்பையில் பெண்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்ற தமிழக அரசு பேருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளது கேரள அரசு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை சபரிமலை செல்லும் பஸ்கள், வேன்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் பம்பை வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு சபரிமலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து நிலக்கல் வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. பம்பையிலிருந்து பக்தர்களை ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேரள அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தற்போது கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

பம்பையிலுள்ள கேரள அரசு பஸ் நிலையத்தில் தமிழக பேருந்துகளை நிறுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மண்டல காலம் முதல் தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் பம்பையிலிருந்து தமிழக அரசு பேருந்துகளில் ஏற வசதி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Devoteessabarimalatamilnadu busiyappan templeMandala Puja
Share
Tweet
SendShare
Previous Post

அதிமுகவில் பணியாற்றாத நிர்வாகிகளுக்கு கல்தா : களையெடுக்கும் இ.பி.எஸ் – சிறப்பு தொகுப்பு!

Next Post

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் : மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி? சிறப்பு தொகுப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies