கந்த சஷ்டி விழா - முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
Oct 28, 2025, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கந்த சஷ்டி விழா – முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 09:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கந்த சஷ்டி விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பரமசிவன், பார்வதி, விநாயகர் உள்ளிட்ட வேடமணிந்து கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் கண்ணை கவரும் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.

வடபழனி முருகன் கோயிலில் நடந்தேறிய சூரசம்ஹார நிகழ்வை காண திரளான பக்தர்கள் குவிந்தனர். கோயிலில் இருந்து புறப்பட்ட முருகப்பெருமான் மேள தாளங்கள் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க சூரனை வதன் செய்தார். இதை கண்டு உடல் சிலிர்த்த பக்தர்கள் முருகா முருகா, அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சூரனை வதம் செய்யும்  சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் இந்நிகழ்வை கண்டு சென்றனர்.

மதுரை மாவட்டம் பழமுதிர்சோலையில் உற்சவ மூர்த்திக்கு பால், பன்னீர், திரவியம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து முருகப்பெருமானின் வேல்வாங்கும் நிகழ்ச்சி பக்தர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. பின்னர் வெள்ளி வேல் கொண்டு சுவாமி, சூரபத்மனை வதம் செய்தார். அப்போது பக்தர்கள் அரோஹரா கோஷங்கள் எழுப்பினர்.

நாகர்கோவில் பாலமுருகன் கோயில், மருங்க்ஷர் சுப்பிரமணிய சாமி கோயில், தோவாளை முருகன் கோயில்களில் சூரம்சம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது.  பால முருகன் சன்னிதானத்தில் இருந்து வெள்ளி குதிரையில் புறப்பட்ட சுவாமி அசுரனுடன் போர் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி  அருகே அமைந்துள்ள முத்து மலை முருகன் கோயிலில். மூன்றாம் ஆண்டு சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு வேல் பூஜை நடைபெற்றது. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி சூரனை வீழ்த்தினார். இதேபோல அம்மாபேட்டை, ஊத்துமலை, சித்ராசாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களில் சூரசம்ஹாரம் விழா சிறப்பாக நடைபெற்றது.

கரூரில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் போர் களத்திற்கு அழைத்து வரப்பட்ட சுவாமி கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனை அழித்தார். இதைத் தொடர்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு மஹா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

Tags: Ganda Sashti festivalSurasamhara eventMurugan temples i
ShareTweetSendShare
Previous Post

சரிவில் இருந்து சாதனை – தடைகளை தாண்டி ட்ரம்ப் சாதித்தது எப்படி? சிறப்பு கட்டுரை!

Next Post

வட மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக பாமக வன்முறையை தூண்டுகிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு!

Related News

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies