சரிந்த சுற்றுலாப்பயணிகள் வருகை : டாக்ஸி மாஃபியாக்கள் பிடியில் கோவா - சிறப்பு கட்டுரை!
Nov 17, 2025, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சரிந்த சுற்றுலாப்பயணிகள் வருகை : டாக்ஸி மாஃபியாக்கள் பிடியில் கோவா – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“கிழக்கின் முத்து” என்று அழைக்கப்படும் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமான கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை, கடந்த சில ஆண்டுகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. கோவாவின் சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவு சரிய கோவாவின் டாக்ஸி மாஃபியா தான் காரணம் என்று சுற்றுலா பயணிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கோவாவின் டாக்ஸி டாக்ஸி மாஃபியா பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இளைஞர்களின் கனவு சுற்றுலா தலமாக கோவா திகழ்ந்து வருகிறது. இயற்கை அழகோடு திகழும் கோவா, வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயங்கள், பழமையான கட்டிடங்கள், பனைகள் தாலாட்டும் கடற்கரைகள், அழகிய தென்னந்தோப்புகள், உற்சாகம் தரும் படகு சவாரிகள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற இசை ஆகியவற்றிற்கு பெயர் பெற்றதாகும். இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து மட்டுமில்லாமல், இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கோவிட் தொற்று காலத்துக்கு முன் ஆண்டுதோறும் 9 லட்சத்து 37,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வந்தனர். ஆனால், கடந்த ஆண்டு, 4 லட்சத்து 50,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கோவாவுக்கு வந்துள்ளனர். இருப்பினும் உள்நாட்டு சுற்றுலா வளர்ச்சியடைந்து வருவதாக கோவா மாநில அரசு தெரிவித்துள்ளது.

கோவா சுற்றுலாத் துறையின் வீழ்ச்சிக்கு ‘கோவா டாக்ஸி மாஃபியா’ தான் காரணம் என்று நெட்டிசன்கள் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

2018ம் ஆண்டில், 2000 ரூபாய் கட்டணத்தில் மும்பையிலிருந்து கோவாவுக்கு விமானத்தில் வந்ததாகவும், கோவா விமான நிலையத்திலிருந்து அரம்போலுக்குச் செல்ல டாக்ஸிக்கு 2500 ரூபாய் செலவழித்ததாகவும், டாக்ஸி மாஃபியா கும்பல் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளிடையே அவநம்பிக்கையையும் வெறுப்பையும் தூண்டும், இது போன்ற சம்பவங்கள், நாளாக நாளாக அதிகரித்துள்ளது.

கோவா டாக்ஸி மாஃபியா. ஒழுங்கு படுத்தப்படாத, உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர் குழுவாகும். மாநிலம் முழுவதும் உள்ள டாக்ஸிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துள்ளது இந்த டாக்ஸி மாஃபியா. இந்த டாக்ஸி மாஃபியாவால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் உள்ளூர் மக்களும் அச்சுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சிறிய மாநிலமான கோவாவில், சாலைகள் மிகவும் குறுகலானவை. மாநிலத்தில் உள்ள வாகனங்களை நிறுத்தவதற்கு கூட கோவாவில் இடமில்லை. சொல்லப்போனால், கோவாவில் மெட்ரோவைத் தவிர திருப்திகரமான பேருந்து சேவை கூட இல்லை. பேருந்து சேவையும் இரவு 9 மணிக்குள் நிறுத்தப் படுகின்றன. மார்கோவைத் தவிர வேறு எந்த முக்கிய நகரங்களுக்கும் இரயில்வே போக்குவரத்து வசதி இல்லை. உள்ளுரில் உள்ள ஆட்டோ ரிக்‌ஷாக்களில் மீட்டர் இல்லை.

மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் டாக்ஸி மாஃபியா கும்பல் மீட்டர் பொருத்த மறுத்துவிட்டது. சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதைக் காட்டும் தடுக்கும் ஜிபிஎஸ் அமைப்புகளை நிறுவவும் அந்த கும்பல் மறுத்துவிட்டது.

உள்ளூர் டாக்சி தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பால் OLAமற்றும் UBER போன்ற செயலிகள் சேவை கோவாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

டாக்சி மாஃபியா மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்சனை என்று ஒப்புக்கொண்ட கோவாவின் போக்குவரத்து அமைச்சர் மவுவின் கோடின்ஹோ, டாக்சியில் மீட்டர் பொறுத்த மறுக்கும் டாக்சி ஓட்டுனர்கள் அரசுக்கு எதிராக போராடுவதாக கூறினார். மேலும் பெரும்பாலான டாக்ஸி ஓட்டுநர்களால், செலுத்தப்படாத டிடிஎஸ் மற்றும் ஜிஎஸ்டியால், அரசுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஹன் கவுண்டே, கடந்த சுற்றுலாப் பருவத்தில் கோவாவில் 150 சதவீத சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வந்ததாக தெரிவித்திருந்தார்.

மேலும், முக்கிய உலகளாவிய மையங்களுடன் வலுவான விமான இணைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை கோவா கணிசமாக அதிகரிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

கோவாவின் முக்கிய சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சிக்காக அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வந்தாலும் சுற்றுலாப்பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மாநில அரசு ஆய்வு செய்து, டாக்சி மாஃபியாக்களின் ஏகபோகத்தை தகர்த்தால் மட்டுமே, கோவாவின் சுற்றுலா துறை வளரும் என்பது உண்மை.

Tags: downfall of Goa's tourism industryGoaTouriststaxi mafiaPearl of the East"
ShareTweetSendShare
Previous Post

இ-பாஸ் சோதனை – மேட்டுப்பாளையம் கல்லார் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல்!

Next Post

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies