நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அள்ளூரில் 15 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப் பாம்பை மீட்ட வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் பத்திரமாக கொண்டு சென்றுவிட்டனர்.
அள்ளூரில் உள்ள வயலில் ராட்சத மலை பாம்பை கண்ட மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப் பாம்பை லாவகமாக பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.