அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள், பயிற்சிப் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Nov 2, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள், பயிற்சிப் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

கல்வி கற்றலில் பின்தங்க வாய்ப்பு!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்வி ஆண்டு தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியும், தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள், பயிற்சிப் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை  எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கல்வி ஆண்டு தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியும், தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பள்ளிக் குழந்தைகளுக்கான சீருடைகளும், பயிற்சிப் புத்தகங்களும் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

அங்கன்வாடி பள்ளிகளின் நோக்கமே, பள்ளிக் கல்வி தொடங்கும் முன், குழந்தைகள், முறையான அடிப்படைக் கல்வி பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வரையில், அங்கன்வாடி குழந்தைகள், பயிற்சி புத்தகங்களில் உள்ள, காய்கறிகளின் பெயர்கள், விடுபட்ட எழுத்துக்கள், படம் வரைதல் உள்ளிட்ட பயிற்சிகளில் தேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் பயிற்சி புத்தகங்களே வழங்கப்படாததால், குழந்தைகளுக்கு எந்த அடிப்படைப் பயிற்சியும் கிடைக்கவில்லை. குழந்தைகளின் சிந்தனைத் திறனைத் தூண்டும் எந்தப் பயிற்சிகளும் வழங்கப்படாததால், இது குழந்தைகளின் கற்றல் திறனையும் பாதிக்கும். அது மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சுமார் 54,000 அங்கன்வாடி மையங்களில், சுமார் 18,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், இதனால், பணியாளர்கள், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று மையங்களைக் கவனித்துக் கொள்ள நேர்வதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும், அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

ஆட்சிக்கு வந்து 44 மாதங்கள் ஆகியும், இது குறித்து திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதோடு, காலி பணியிடங்களை நிரப்பாமல், ஊழியர்கள் மீது பணிச் சுமையைத் திணித்துக் கொண்டிருக்கிறது. ஏழை, எளிய பின்புலத்தில் இருந்து வரும் குழந்தைகள், அடிப்படைக் கல்வியும், சிந்தனைத் திறனும் பெற வேண்டும், கல்வியில் சமவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டவை அங்கன்வாடி மையங்கள்.

இந்த அடிப்படைப் பயிற்சி கிடைக்கவில்லை என்றால், பள்ளிக் கல்வி கற்றலில் குழந்தைகள் பின்தங்கவும் வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: tn schoolanganvadiannamalai bjpAnganwadi school children still not provided uniformstraining books! - Annamalai allegationtn politics
ShareTweetSendShare
Previous Post

2வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு!

Next Post

ஆசிய- பசிபிக் காதுகேளாதோருக்கான போட்டியில் இந்தியா சாதனை! : அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு!

Related News

சென்னை மெரினா கடற்கரையில் பனை மர விதை நடவு செய்து விழிப்புணர்வு!

முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

துபாய் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி – அவனி லெகரா தங்கம் வென்று அசத்தல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் – அமித் ஷா குற்றச்சாட்டு!

மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் – இன்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா!

விசாரணையில் குறைபாடு – கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை!

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது சி.எம்.எஸ் – 3 செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies