பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினரை ஊருக்குள் விடாமல் விரட்டியடிப்போம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை மாநகராட்சி கண்டுகொள்வதில்லை எனக்கூறி கூறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள், தமிழக அரசு மற்றும் திருநெல்வேலி மாநகராட்சியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து தவ்ஹீம் ஜமாத் அமைப்பின் மேலாண்மை குழு தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, திமுக எம்.எல்.ஏ தனது தொகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்துதரவில்லை என குற்றம்சாட்டிய அவர், ஊருக்குள் வந்தால் அவரை விரட்ட மக்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.