டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: சட்டப் பேரவையில் காரசார விவாதம்!
Jan 14, 2026, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: சட்டப் பேரவையில் காரசார விவாதம்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2024, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டப் பேரவையில் தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

தமிழக சட்டப் பேரவை கூடியதும் டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்வதற்கான தனித் தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், டங்ஸ்டன் சுரங்கத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது பேசிய பாஜக சட்டப் பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு அன்றைக்கே எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம் என்றும், பல மாதங்களுக்கு பின்பு தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டார்.

தீர்மானத்தின் மீது பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மாநில அரசின் ஒப்புதலின்றி சுரங்கம் தொடர்பான அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது என்று தீர்மானத்தை வரவேற்று பேசினார்.

இதேபோல டங்ஸ்டன் கனிம நிறுவனத்திற்கு மக்களே எதிர்ப்பு தெரிவித்து போராடுவதால் மத்திய அரசு கட்டாயமாக கைவிட வேண்டும் என பாமக சட்டப் பேரவைக் குழு தலைவர் தலைவர் ஜி.கே. மணி கேட்டுக்கொண்டார்.

தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, சுரங்கம் விவகாரத்தில் ஆரம்ப கட்டத்தில் தமிழக அரசு தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்றும், தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் தடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் திரும்பத் திரும்ப தவறான கருத்தை பதிவு செய்வதாகவும், ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என சட்டம் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது.

விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த போதும் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம் என கூறிய அவர், ஒருவேளை திட்டம் அமையும் சூழல் வந்தால், முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என சூளுரைத்தார்.

காரசார விவாதத்துக்குப் பின்னர், சட்டப் பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

Tags: tn assemblyTungsten mining issue: The legal debate in the Legislative Assembly!
ShareTweetSendShare
Previous Post

சென்னை புத்தக கண்காட்சி டிச.27-ம் தேதி தொடக்கம்! – பபாசி

Next Post

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்து ஊழியர்கள் போராட்டம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies