உலகை வியக்க வைக்கும் இந்தியா : 55 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் என கணிப்பு - சிறப்பு கட்டுரை!
Jul 10, 2025, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகை வியக்க வைக்கும் இந்தியா : 55 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் என கணிப்பு – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 10, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047ஆம் ஆண்டில், சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டை கொண்டாடும் போது, ​​இந்தியா 55 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடைசியாக இந்தியா 13-14 ஆம் நூற்றாண்டில் ஒரு சிறந்த பொருளாதாரமாக இந்தியா இருந்தது. 1750 வரை ஒவ்வொரு நூற்றாண்டிலும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டிருந்தது.

1947 முதல் 1991 வரையிலான சோசலிச மாதிரியைப் பின்பற்றியதன் மூலம், கிழக்கு ஆசியப் பொருளாதாரங்களில், தென் கொரியா, சிங்கப்பூர் என ஆசிய நாடுகள் அனைத்தும் வளர்ந்தபோது இந்தியா பின்தங்கி விட்டது. இப்போது தான் பிரதமர் மோடி தலைமையில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ந்து வருகிறது.

இந்தியாவின் 17வது தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவி வகித்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வருகிறார். சமீபத்தில், இந்தியா @100: நாளைய பொருளாதார சக்தியை எதிர்பார்க்கிறது என்ற நூலை எழுதியுள்ளார்.

அந்நூலில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான தனது பார்வையை பதிவு செய்திருக்கிறார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 55 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறும் என்று தெரிவித்திருக்கிறார்.

1970 முதல் 1995 வரை, வியட்நாம் போர், கச்சா எண்ணெய் பிரச்சனைகள் மற்றும் அதிக பணவீக்கம் போன்ற குறிப்பிடத்தக்க சவால்கள் இருந்தன. என்றாலும் ஜப்பானின் பொருளாதாரம் கிட்டத்தட்ட 25 மடங்கு வளர்ந்தது. அதே போல், 1996 முதல் 2021வரை சீனாவின் பொருளாதாரம் 22 மடங்கு உயர்ந்தது. ஜப்பான் மற்றும் சீனாவுடன் ஒப்பிடும் போது, ​​இந்தியா 3.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் இருந்து 55 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரை 15 மடங்கு வளர்ச்சியை நிச்சயம் அடைய முடியும் என்று கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பணவீக்கம் 2016 முதல் 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக படிப்படியாகக் குறைந்துள்ளது, எதிர்காலத்தில் பணவீக்கம் சுமார் 1 சதவீதம் வரை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதன் பொருள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் இரட்டிப்பாகும் என்பதாகும். இதன் படி பார்த்தால், 2047 ஆண்டில் இந்தியா 55 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாகும்.

இந்த இலக்கை அடைவதற்கு பல துறைகளில் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படும் என்பதை ஒப்புக்கொண்டுள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், முறையான துறையில் உற்பத்தியை மேம்படுத்துவது இன்றியமையாதது என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில், 12.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 சதவீதத்தை முதலீடாக பராமரிக்க வேண்டும்.

2014 ஆம் ஆண்டுக்குப் பின், உலகளவில் மூன்றாவது பெரிய தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா உருவாகி உள்ளது. 2014ம் ஆண்டு, உலகளாவிய கண்டுபிடிப்பு தரவரிசையில் 85வது இடத்தில் இந்தியா இருந்தது. இந்த ஆண்டு, கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியலில் 39 வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

அதே போல், 10 ஆண்டுகளுக்கு முன் எளிதாக வணிகம் என்பதில் 140 வது இடத்தில் இந்தியா இருந்தது. இந்த ஆண்டு, 60 இடத்துக்கு முன்னேறியுள்ளது. இவை இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான தெளிவான குறிகாட்டிகளாகும். முதலீடு மற்றும் உற்பத்தி வளர்ச்சியே ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி ஆகும்.

இந்தியாவின் இந்த அபரிதமான வளர்ச்சி அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு அற்புதமான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் என்று கணித்துள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், தங்கள் பணத்தை 15 முதல் 20 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு இனி இந்தியாவில் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற வருமானத்தை வேறு எந்தப் பொருளாதாரமும் வழங்கப் போவதில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் டாலர்களில் 12 சதவீத வளர்ச்சியுடன், சம்பள உயர்வு கிடைக்கிறது என்றால்,அதுவே இந்தியாவில் சுமார் 18 சதவீத வளர்ச்சி கிடைக்கும். அதாவது, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் சம்பளம் இரட்டிப்பாகும். சுருக்கமாக சொல்லப் போனால், அமெரிக்காவில் எதிர்பார்ப்பதை விட இந்தியாவில் சம்பள வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். எனவே, இந்திய வங்கிக் கணக்குகளில் பணத்தைச் சேமிக்குமாறு புலம்பெயர்ந்த இந்தியர்களை கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மாதிரியைப் பாராட்டியுள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

Tags: Indian Economynternational Monetary Fund Managing DirectorKrishnamurthy Subramanian.East Asian economieseconomyGDP
ShareTweetSendShare
Previous Post

வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலைய இணைப்பு சாலை – வர்த்தக சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு!

Next Post

மகாராஷ்டிரா முதலமைச்சருடன் அதானி சந்திப்பு!

Related News

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

ஜிக்கு… ஜிக்கு… சிக்காட்டம் – வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு பெண் தர்ணா!

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

ஆந்திரா : மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து!

டெல்லியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு : பெரிய குப்பத்தில் சிபிசிஐடி விசாரணை!

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

கேரளா : வெகுவிமரிசையாக நடைபெற்ற படகுப் போட்டி!

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன!

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது – தடை விதித்த உத்தரவு நிறுத்திவைப்பு – சென்னை உயர்நீதிமன்றம்!

மகாவதார் நரசிம்மா படத்தின் டிரைலர் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies