ராமேஸ்வரம் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், அப்பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை பாக் ஜலசந்தி பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் எதிரொலியாக 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே கடலுக்குச் செல்ல முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள், நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.