தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் பகுதியில் சாலையில் குளம்போல தேங்கியுள்ள மழைநீரால் மாணவ – மாணவியர் அவதியடைந்தனர்.
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மில்லர்புரத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியதால், அப்பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் மழைநீரில் நடந்துசெல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும், மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த பெற்றோர் மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.