தெய்வ வழிபாட்டிற்கு சிறந்த மார்கழி மாதத்தின் மகத்துவம் - சிறப்பு கட்டுரை!
Aug 21, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெய்வ வழிபாட்டிற்கு சிறந்த மார்கழி மாதத்தின் மகத்துவம் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 22, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி மட்டுமே. அதனால், மாதங்களில் தான் மார்கழியாக இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ணன் கூறியிருக்கிறார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் உயர்வாக சொல்லும் மார்கழி மாதத்தின் சிறப்புக்களை பற்றி பார்ப்போம்.

பொதுவாக, பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பார்கள். அதாவது, எந்த மங்கல நிகழ்ச்சி ஆனாலும், பிள்ளையாரையைத் துதித்து தொடங்கி, ஆஞ்சநேயரைத் துதித்து முடிப்பார்கள். சொல்லப் போனால் ஆரம்பித்த காரியம் நல்ல படியாக முடிந்தது என்பதையே பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

இதன்படி பார்த்தால், மார்கழி மாதத்தில் மட்டுமே விநாயகர் பூஜையில் தொடங்கி, ஆஞ்சநேயர் ஜெயந்தி வரை அனைத்து தெய்வ வழிபாடுகளும் நடக்கின்றன. எனவே தான், மார்கழி மாதம் பீடுடைய மாதம் என்று போற்றப்படுகிறது.

மனிதர்களாகிய நமக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களின் நாள். தேவர்களின் பகல் நேரம் தை முதல் ஆனி மாதம் வரை ஆகும். இது உத்தராயனம் எனப்படும். தேவர்களின் இரவு நேரம் ஆடி முதல் மார்கழி வரை ஆகும். இது தட்சிணாயனம் எனப் படும்.

இந்த முறைப் படி, மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முகூர்த்த நேரமாகும். எனவே இந்த மாதத்தில் தெய்வ வழிபாட்டுக்குரிய சிறந்த மாதமாக கருதி, வேறு எந்த மங்கல நிகழ்ச்சிகளையும் நாம் நடத்துவதில்லை.

மார்கழி மாதம் முழுவதும், ஆண் ,பெண்,அனைவரும் சூரியன் உதிப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக எழுந்து விடுவார்கள். அன்றாட கர்ம அனுஷ்டானங்களை நியமமாக செய்து முடிப்பார்கள். வீட்டைச் சுத்தம் செய்து, முற்றத்தின் நடுப்பகுதியைச் சாணத்தால் மெழுகி,மாக்கோலம் போட்டு,சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து புக்களைத் தூவி,விநாயகரை வழிபடுவார்கள்.

குறிப்பாக, அசுர,பூதபிசாசுகளின் தொல்லைகளால் எந்தவித துயரமும் நேரத்த படி காப்பற்றுவாயாக என்று விநாயகரை வணங்குவார்கள். அந்த வீட்டில் காவல் தெய்வமாக விநாயகரே இருந்து காப்பார்.

அப்படி வீடு தேடி வரும் பூத பிசாசுகள்,எறும்பாகவும், ஊர்வனவாகவும் வந்து, வாசலில் மாக்கோலமிட்ட பச்சரிசி மாவைச் சாப்பிட்டு விட்டு என்று விடும். எனவே தான், பச்சரிசி மாவினால் தான் கோலமிட வேண்டும்.

தொடர்ந்து இப்படி பூஜை செய்யும் விநாயகர் வடிவங்களை, தைப் பொங்கலுக்குப் பின், ஒரு நல்ல நாளில், மொத்த விநாயகர் வடிவங்களை ஓரிடத்தில் வைத்துபூஜை செய்து , பிரத்யேக தேரில் அந்த சாண விநாயகர்களை வைத்து அலங்கரிப்பார்கள். பிறகு வாத்திய கோஷத்துடன், கடலில்,அல்லது குளத்தில் கரைப்பார்கள். மார்கழியில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் வீட்டில் வறுமை நீங்கும்.நோய் நீங்கும்.செல்வம் பெருகும்.விரும்பிய ஆசைகள் நிறைவேறும்.

பற்றற்ற நிலையுடன் பலனை எதிர்பார்க்காத பக்தர்கள் என்றால், பிரகலாதன், ஆஞ்சநேயர்,மற்றும் கோபியர் ஆகியவர்களே. உத்தமனான பக்தர்கள் பலவிதமான சோதனைகளுக்குப் பிறகு இறைவனால் காப்பாற்றப் பட்டு உயர்ந்தார்கள்.

ஆனால். சுவாமிக்கும் அவர் பிராட்டிக்கு ஒரு சோதனை வந்த போது, அவர்களைக் காப்பாற்றினார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் அவதார நாள், மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் வருகிறது. இந்தவகையில் மார்கழி மாத சிறப்பு விநாயகரின் தொடங்கி ஆஞ்சநேயர் பூஜையில் நிறைவடைகிறது.

மார்கழி என்றாலே, மணிவாசகர் அருளிய திருவெம்பாவையும் ஆண்டாள் அருளிய திருப்பாவையும் எங்கும் ஒலிக்கும். நம் அக இருளையும், புற இருளையும், ஒன்றாக நீக்கும் சக்தி, இந்த இரண்டு பாவை பாடல்களுக்கும் உண்டு. எனவே தான், மார்கழி மாதம் அதிகாலையில், பாவை பாடல்கள் பாடி திருக்கோயில் வளம் வந்து இறைவனை வணங்குவது தொன்று தொட்டு பழக்கமாக உள்ளது.

மார்கழி என்றாலே ஸ்ரீ நடராஜ பெருமான் நினைவுக்கு வருவார். இந்த மாதத்தில் தான் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடக்கிறது. மார்கழி திருவாதிரை நாளன்று ஸ்ரீ நடராஜ பெருமானுக்குச் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். ஆருத்ரா தரிசனம் அற்புத தரிசனம் ஆகும். இந்த நாளில் தான், பதஞ்சலி முனிவருக்கும், புலிக் கால் முனிவருக்கும் இறைவன், ஆனந்த நடனத்தை ஆடிக் காட்டினார் என்பது வரலாறு .

மார்கழி மாதத்தின் கடைசி நாளில் தான் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்த ஸ்ரீ ஆண்டாள், இந்நாளில் தான் திருவரங்க நாதரைத் திருமணம் புரிந்து போக போக்கியங்களை அனுபவித்தாள். அதனாலேயே இந்நாள் போகி பண்டிகை என்று அழைக்கப்படுகிறது.

இருட்டு முடிந்து தேவர்களின் பகல் பொழுது ஆரம்பிக்கிறது. எனவே மார்கழி மாதம் முழுதும் இறைவனை துதித்து வழிபட்டால், தை முதல் ஆடி வரை உள்ள ஆறு மாதங்களும் போகங்களை அனுபவிக்கும் காலமாக மாறும் என்பது உண்மை.

தீமைகளை அகற்றி நன்மைகளை வழங்கும் இந்த நல்ல மாதத்தில், இறைவனை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவோம்.

Tags: anjaneyarMargazhi.Margazhi monthமார்கழி மாதம்Sri Krishna Paramatma Gitaமார்கழி மாத மகத்துவம்Pillaiyar
ShareTweetSendShare
Previous Post

தமிழக ரயில்வே திட்டப் பணிகள் – நிலம் கையகப்படுத்துவதில் மாநில அரசு தாமதம் செய்வதாக புகார்!

Next Post

நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் விடுதலை 2 திரைப்பட குழு மீது நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

Related News

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies