அரசு மருத்துவமனைகளில் அதிக காலிப்பணியிடங்கள் ; அவசர பிரிவில் சுகாதாரத்துறை - சிறப்பு கட்டுரை!
Aug 20, 2025, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் அதிக காலிப்பணியிடங்கள் ; அவசர பிரிவில் சுகாதாரத்துறை – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Dec 19, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் இருப்பது சி.ஏ.ஜி எனப்படும் கணக்கு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டின் நிலவரப்படி தமிழகத்தின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கிவரும் பல்வேறு இயக்குனரகங்களில் மொத்தமாக 29 ஆயிரத்து 27 காலிப்பணியிடங்கள் அதாவது 28 சதவிகிதம் காலிப்பணியிடங்கள் நிலவிவருவது தெரியவந்துள்ளது.

குடும்ப நல இயக்ககத்தின் கீழ் இயங்கிவரும் குடும்ப நல உதவியாளர், குடும்ப நல விரிவாக்க கல்வியாளர், மகப்பேறு குழந்தை நல அலுவலர் பணியிடங்கள் 100 சதவிகிதம் காலிப்பணியிடங்களாகவே இருந்துள்ளன.

அதே போல ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் 12 ஆயிரத்து 791 காலிப்பணியிடங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 43 சதவிகிதமாக இருக்கிறது. மேலும் 10 ஆயிரத்து 759 துணை மருத்துவர் பணியிடங்களில் 3 ஆயிரத்து 621 பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன.

அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ICU பிரிவில் உள்ள ஒவ்வொரு படுக்கைகளுக்கும் தலா ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என்ற இந்திய செவிலியர் மன்ற விதிமுறைகளுக்கு மாறாக தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் 60 முதல் 88 சதவிகிதம் வரை செவிலியர் பற்றாக்குறை இருப்பதை சி.ஏ.ஜி அறிக்கை உறுதி செய்துள்ளது.

அதிலும் செய்யாறு, ஈரோடு, கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான செவிலியர்களே ICU பிரிவில் பணியாற்றி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
மருந்தாளுநர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அரசு, அதன் பின் முறையான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனவும், மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த தனி வாரியம் அமைக்கப்பட்டிருந்தாலும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பின் தங்கியே இருந்ததாகவும் சிஏஜி அறிக்கையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவசர கால ஊர்தியான 108 ஆம்புலன்ஸ் சேவையில் போதிய ஜிபிஎஸ் வசதி இல்லாத காரணத்தினால் இலக்கான 20 நிமிடங்களை 46 சதவிகித அழைப்புகள் சென்றடையவில்லை என்ற தகவலையும் சி.ஏ.ஜி அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும் தமிழக அரசால் பல்வேறு வகைகளில் திரட்டப்பட்ட நிதியான ஆயிரத்து 787 கோடி ரூபாயில் 264 கோடி ரூபாய் மீதமிருப்பதும் தெரியவந்துள்ளது.

கொரானா தொற்று காலத்தில் ராஃபா எனும் நிறுவனம் பத்துலட்சம் N-95 முகக்கவசங்களை வழங்க முன்வந்திருந்த போதிலும், அந்த நிறுவனத்திடமிருந்து ஐந்து லட்சம் மட்டுமே வாங்கப்பட்டதாகவும், அதன் விளைவாக மற்ற நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து N-95 முகக்கவசங்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதும் சிஏஜி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சாமி கோயிலில் தேங்கிய மழை நீர் – பக்தர்கள் அவதி!

Next Post

பாஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies