தடுப்பணையால் தத்தளிக்கும் கிராமம்! : மக்களின் வேதனையை தீர்க்குமா அரசு?
Jun 30, 2025, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தடுப்பணையால் தத்தளிக்கும் கிராமம்! : மக்களின் வேதனையை தீர்க்குமா அரசு?

Web Desk by Web Desk
Dec 23, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்பெண்ணை ஆற்றில் அவ்வபோது ஏற்படும் வெள்ளப்பெருக்கால் ஒரு கிராமமே கடும் இன்னலுக்குள்ளாகிறது. சேமடைந்த தளவானூர் தடுப்பணையை கட்ட வேண்டியதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றின் கரையோரத்தில் உள்ள தளவானூரில், வெள்ள நீர் புகுந்து கிராமமே ஆறாக மாறிய காட்சிகள் தான் இவை..!

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் தளவானூர், எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட அதிமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து 2020-ம் ஆண்டு அக்டோபரில் 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரத்துடன், மொத்தம் 3 ஷட்டர்களுடன் கட்டப்பட்ட தடுப்பணையை அன்றைய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திறந்து வைத்தார். கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலே தடுப்பணையின் மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அதை முன்னிறுத்தியே பரப்புரையில் ஈடுபட்டார் திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின்.

மேலும் தடுப்பணை அருகே பொன்முடி தலைமையில் திமுகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அன்றைய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், புதிதாக தடுப்புச் சுவர் கட்டுவதற்காக 7 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் உடனடியாக கட்டப்படும் என்றும் கூறியிருந்தார்.

பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் ஊருக்குள் வெள்ளநீர் புகுந்ததால், கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதையடுத்து அணையை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி அணை கட்டுவதற்கான ஆவணங்களை தமிழக அரசிடம் அளித்துள்ளதாகவும் இரண்டு கரைப்பகுதியிலும் சரி செய்வதற்காக, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை அந்த பகுதியில் அரசு எந்த பணியையும் தொடங்காததால், தற்போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கிராமம் முழுவதும் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும், கிராமத்தில் உள்ள வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் முருகவேலிடம் தடுப்புச் சுவர் கட்ட ஒதுக்கியதாக கூறப்படும் 15 கோடி வெறும் வெற்று விளம்பரம் தானா என கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கிராம மக்களை திமுகவினர் ஒருமையில் மிரட்டியதால், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தடுப்பணை கட்டப்படும் என உறுதி அளித்திருந்த, வனத்துறை அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, அவர் பதில் அளிக்காமல் நழுவி சென்றார். அது மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது.

ஆட்சி மாறினாலும் தங்களின் அவலநிலை மாறவில்லை என வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள், வெள்ளத்தின் போது வீட்டு உபயோக பொருட்களை அனைத்தையும் இழந்ததாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆற்றில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதி கிராமமே ஆறாக மாறிவிட்டது என வேதனை தெரிவிக்கும் கிராமத்தினர், தடுப்பணையை அகற்றியாவது, தங்கள் கிராமத்தை காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கும் தளவானூர் தோப்பு கிராம மக்களின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டும் என்பதே தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நோக்கம்.

Tags: The village is reeling from the barricade! : Will the government solve the pain of the people?
ShareTweetSendShare
Previous Post

நாகையில் சுனாமி நினைவு ஸ்தூபியில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி பிரார்த்தனை!

Next Post

இத்தாலியில் மலிவு விலையில் வீடு : பழமையான வீடுகள் ரூ.87 மட்டுமே – சிறப்பு கட்டுரை!

Related News

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

தேனி கண்டமனூர் தடுப்பணையில் வழிந்தோடும் தண்ணீர் – விவசாயிகள் மகிழ்ச்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நிறைவேறிய கனவு : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுக்லாவின் பணி என்ன?

சிவகங்கை அருகே காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு – எல்.முருகன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அவசர நிலை இந்திய வரலாற்றின் இருண்ட பக்கம் – பிரதமர் மோடி

ஜெய்பீம் படத்திற்கு Review எழுதிய முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? – இபிஎஸ் கேள்வி!

பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

திமுக எம்பி மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் கண்டுபிடிப்பு!

புதுச்சேரி பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ராமலிங்கம்!

ஆ.ராசாவை கண்டித்து ஜுலை 1ல் பாஜக ஆர்பாட்டம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பாஜக போராட்டம்!

கோவையில் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதிய மின்சார பேருந்து – தீப்பற்றி எரிந்து சேதம்!

இறுதி கட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு பணிகள்!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies