கைது செய்யப்பட்ட ஞானசேகரின் கூட்டாளிகள் யார்? - தீவிர விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
Mar 15, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைது செய்யப்பட்ட ஞானசேகரின் கூட்டாளிகள் யார்? – தீவிர விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2024, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகியா ?  என்றும், திமுகவினரையும் குற்றச்சம்பவங்களையும் பிரிக்கவே முடியாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது என  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளாகவே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் என்பவர் திமுகவைச் சேர்ந்தவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஏற்கனவே பலமுறை மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகாருக்குள்ளான ஞானசேகரன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததும், 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அவரை முறையாக காவல்துறை கண்காணிக்கத் தவறியதே மீண்டும் மீண்டும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் தொடங்கி, அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல், அரசியல் பிரமுகர்கள் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் திமுகவினரின் தலையீடு இல்லாமல் நடக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் அண்ணா பல்கலைகழக விடுதியில் தங்கி பயின்று வரும் சூழலில், அந்த வளாகத்தில் குறைந்தபட்ச சிசிடிவி கேமராக்கள் கூட இயங்காமல் பழுதடைந்த நிலையில் இருந்திருப்பது மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதோடு, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உயர்கல்வித்துறையின் அலட்சியப்போக்கையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எனவே, பலமான பாதுகாப்பு வளையம் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் வெளிநபர் நுழைந்தது எப்படி ? இதற்கு முன் எத்தனை மாணவிகளை வீடியோ பதிவு செய்து இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார் ?

கைது செய்யப்பட்ட ஞானசேகரின் கூட்டாளிகள் யார் ? யார் உதவியோடு இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் ? என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி இந்த குற்றச்சம்பவத்திற்கு காரணமான அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: TTV DinakarandinakaranAnna University student rape caseGnanasekaran
ShareTweetSendShare
Previous Post

பெண்களின் பாதுகாப்பு தனி மனிதனின் ஒழுக்கத்தில்தான் உள்ளது – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Next Post

அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நீதி கேட்டு போராட்டத்திற்கு சென்ற பாஜகவினர் கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies