பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்! - காடேஸ்வரா சுப்பிரமணியம்
Mar 15, 2026, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்! – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Murugesan M by Murugesan M
Dec 30, 2024, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தக்க ஏற்பாடுகளைச் செய்வதில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்  என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர் மீது அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது மிகுந்த கவலை அளிக்கும் விஷயம்.

பழனிக்கு பல லட்சம் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்வதுபோல திருச்செந்தூருக்கும் முருக பக்தர்கள் ராஜபாளையம், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பல ஊர்களில் இருந்து செல்கிறார்கள்.

திருச்செந்தூர் பாத யாத்திரை பக்தர்களுக்கு தனி வழி ஏற்படுத்த திட்டம் செயல்படுத்த துவங்கி ஆண்டுகள் பல ஆன பின்னரும் அதனைச் இன்னும் நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது தமிழக அரசு.

இதுவரை பாதை போடப்பட்ட வழிகளிலும் புதர்கள் மண்டிக் கிடக்கிறது. அந்த பகுதியில் மலம், சிறுநீர் கழித்து அசுத்தம் படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் காரணமாக விபத்தில் சிக்கும் சூழல் உருவாகிறது.

தமிழக அரசு வேற்று மதத்தினர் வெளிநாடு யாத்திரை செல்ல நிதி உதவி அளிப்பதுடன், வழி அனுப்பி வைக்க விமான நிலையம் வரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரிசைகட்டி நிற்பதை பார்க்கிறோம். அவர்கள் தங்குவதற்கு பல இடங்களில் தங்கும் விடுதிகள் மக்கள் வரிப்பணத்தில் ஏற்பாடு செய்து வைத்து தமிழக அரசு பராமரிக்கிறது.

ஆனால் தமிழர்கள் தங்கள் தெய்வத்தை வழிபட சொந்த மாநிலத்தில் நடந்து செல்வதற்குத் கூட எந்த வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்வதில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

பல நாட்கள் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும், குளிப்பதற்கும், ஓய்வு எடுக்கவும் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டியது அரசின் கடமை ஆகும்.

ஆனால் தமிழக இந்து சமய அறநிலையத் துறை உலக முருக பக்தர்கள் மாநாடு என்று கோவில் நிதியில் நடத்தியதை பெருமை பேசுகிறது.

தமிழகத்திற்கு என்று சில விசேஷமான ஆன்மிக செயல்பாடுகள் இருப்பது தனித்துவமானது. அதில் மிகவும் பிரசித்தி பெற்றது விரதம் இருந்து பாத யாத்திரை செல்லும் நிகழ்வாகும்.

எனவே பாதயாத்திரை செல்ல தனி வழி அமைக்கும் திட்டத்தை விரைந்தும், தரமாகவும் முடிக்க வேண்டும்.

இரவு நேரங்களில் , விடியற்காலை நேரங்களில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு ஒளிரும் உடை மற்றும் ஆங்காங்கே தற்காலிக ஓய்வுக் குடில், கழிப்பறைகள், குளியலறைகள் முதலானவற்றை ஏற்படுத்தித் தர தமிழக அரசையும் இந்து சமய அறநிலையத் துறையையும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: hindhu munaniThe Tamil Nadu government should focus on the safety of pilgrims! - Ghadeswara Subramaniamthe safety of pilgrims
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

Next Post

புத்தாண்டையொட்டி ஹிமாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies