திருச்சியில் சாலை விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளரின் இறுதி சடங்கை வருண்குமார் ஐபிஎஸ் முன்னின்று நடத்தினார்.
திருச்சி பெட்டவாய்த்தலை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவருக்கான இறுதிச்சடங்கு துவாக்குடியில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட எஸ்.பியாக இருந்தவரும், தற்போது டிஐஜியாக பதவி உயர்வு பெற்றவருமான வருண்குமார் கலந்துகொண்டார்.