மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு கல்லணையில் மணிமண்டபம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்மாழ்வாரின் 11-ஆவது நினைவுதினத்தையொட்டி கும்பகோணம் அடுத்த ஏரகரத்தில், அவரது படத்திற்கு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது நம்மாழ்வாருக்கு கல்லணையில் மணிமண்டபம் அமைத்து கௌரவிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.