சான்றோர், ஆன்றோர்களின் அடையாளங்களை அழிக்க திமுக முயற்சி! : எச்.ராஜா குற்றச்சாட்டு
Mar 15, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சான்றோர், ஆன்றோர்களின் அடையாளங்களை அழிக்க திமுக முயற்சி! : எச்.ராஜா குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Dec 31, 2024, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் வளர்த்த சான்றோர்கள், அறம் வளர்த்த ஆன்றோர்கள் அனைவரின் அடையாளங்களையும் அழிக்க திமுக முயல்வதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி இனி திருவள்ளுவரின் சிலையை “பேரறிவு சிலை” என அனைவரும் அழைக்க வேண்டுமென, திருவள்ளுவரின் நெற்றியில் இருந்து திருநீரை அழித்த திராவிட மாடல் தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களை காட்டு மிராண்டிகள் என்றும், தமிழை காட்டுமிராண்டி மொழி எனவும் ஏளனம் செய்து தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரத்தை நாத்திகம் என்கிற பெயரில் சீரழித்து திருக்குறளை கேவலமாக விமர்சித்த ஈவெரா சிலையை “பேரழிவு சிலை” என அழைக்கக் கூறுவாரா முதல்வர் ஸ்டாலின் என்றும் அவர் வினவியுள்ளார்.

வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு என தமிழர்கள் அனைவரும் பெருமிதம் கொள்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், வள்ளுவப் பெருந்தகையின் பெயரை வருங்கால சந்ததிகளின் சிந்தனைகளுக்கும், செவிகளுக்கும் எட்டாமல் இருட்டடிப்பு செய்யும் சதியோ முதல்வர் ஸ்டாலினின் கூற்று என்கிற ஐயம் அனைவருக்கும் எழுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

வள்ளுவரின் நெற்றியிலிருந்தும்,
வள்ளலாரின் நெற்றியிலிருந்தும்,
ஒளவையாரின் நெற்றியிலிருந்தும்,
திருநீறை அழித்த திராவிட மாடல் தீய சக்திகள், தமிழ் வளர்த்த சான்றோர்கள், அறம் வளர்த்த ஆன்றோர்கள் அனைவரின் அடையாளங்களையும் அழிக்க திட்டமிட்டு அவர்களின் திருப்பெயரையும் அழிக்க முயல்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிவதாக அவர் கூறியுள்ளார்.

திருக்குறள் “பேரறிவு” என்பதில் மிகையேதும் இல்லை என்று கூறியுள்ள ஹெச்.ராஜா, ஆனால் திராவிடம் “பேரழிவு” என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், தமிழ் வாழ வேண்டுமானால் திராவிடம் அஸ்தமனமாக வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

Tags: DMK's attempt to destroy the identity of witnesses and others! : Accusation of H. Raja
ShareTweetSendShare
Previous Post

RSS-ன் முயற்சியால் வெள்ளி விழா காணும் திருவள்ளுவர் சிலை!

Next Post

16 கிலோ மெத்தப் பெட்டைமின் பறிமுதல்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies