தாம்பரம் பணிமனையில் நடைபெறும் கட்டுமான பணிகள் காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் ரயில்வே பணிமனையில் கட்டுமான பணிகளும், புதிய பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான மின்சார ரயில் சேவை இன்று மாலை 4 மணிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களுக்கு பதிலாக கடற்கரை முதல் பல்லாவரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் வழக்கம்போல் அட்டவணைப்படி இயக்கப்படுகின்றன.