தேசியக் கொடி பிடித்தபடி உயிர் நீத்த உன்னத ஆத்மா திருப்பூர் குமரன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “1932 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலேய அரசுக்கு எதிரான பேரணியின் போது, கைகளில் ஏந்தியிருந்த “தேசியக் கொடியை” தன் உயிரை விடவும் மேலாக கருதி,இறுகப் பிடித்துக் கொண்டே உயிர் நீத்த உன்னத ஆத்மா.
தேசத்தின் விடுதலைக்கு இளம் வயதில் தனது பெரும் பங்களிப்புகளை வழங்கிய திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினமான இன்று, அவரது தியாகத்தை போற்றி வணங்குவோம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















